Saturday, October 29, 2011

தீபாவளிப் படங்கள் ‌சிற‌ப்பு கண்ணோட்டம்.

நான்குப் படங்கள் வெளியாவதாக இருந்த இந்தத் தீபாவளி இறுதியில் இரண்டுப் படங்களாக சுருங்கியிருக்கிறது. உடம்பு ச‌ரியில்லை முன்பு போல் வேலை செய்வது கடினமாக இருக்கிறது என்று தனது மயக்கம் என்ன தீபாவளிக்கு வெளியாகாததற்கு விளக்கம் அளித்துள்ளார் செல்வராகவன். ஒஸ்தி குறித்து சிம்பு எந்த விளக்கமும் தரவில்லை. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மற்றும் தயா‌ரிப்பு தரப்பின் நெருக்கடி ஆகிய காரணங்களால் ஒஸ்தியும் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆக, வெளிவரவிருப்பது முருகதாஸின் 7 ஆம் அறிவு, ராஜாவின் வேலாயுதம் இரண்டு மட்டுமே.

மூன்று தீபாவளிக்கு முன்புவரை, நான் விஜய் மாதி‌ரியெல்லாம் கிடையாது, அவரைப் போல் ஆட எனக்கு வராது என்று விஜய்யை புகழ்ந்துப் பேசும் நிலையில் இருந்தார் சூர்யா. இன்று காட்சி மாறியிருக்கிறது. விஜய்யை குறித்துப் பேசுவது, அவருக்கு தேவையில்லாமல் ஒரு அந்தஸ்தை உருவாக்கித் தந்துவிடும் என்று நினைக்கும் இடத்துக்கு சூர்யா வந்திருக்கிறார். ர‌ஜினி, கமலுக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகரும் இவர்தான். இந்த கௌரவத்தை இதற்கு முன் வைத்திருந்தவர் விஜய். 7 ஆம் அறிவு, வேலாயுதத்துக்கு இடையேயான போட்டியின் கனம் இப்போது ஏகதேசமாக பு‌ரிந்திருக்கும்.

ஷங்கருக்குப் பிறகு கமர்ஷியலில் அடி பின்னுவது முருகதாஸ்தான். இவர் உருவாக்கும் உணர்வுபூர்வமான திரைக்கதைப் பின்னலில் ரசிகர்கள் லா‌ஜிக் ஓட்டைகளை மறந்துவிடுகிறார்கள். இந்தமுறை தமிழனின் பெருமையை சொல்லும் போதி தர்மர் என்று இன உணர்வுக்கு செமத்தியான தீனி தரும் சப்ஜெக்ட். முடிந்த அளவுக்கு இதனை பீக்கிற்கு கொண்டு சென்றிருப்பார். நோக்கு வர்மம், சர்க்கஸ்காரன், இளமை ததும்பும் இளம் விஞ்ஞானி ஸ்ருதி, வெளிநாட்டு வில்லன், ஜெட்லீ டைப் சண்டைகள்... தொலைந்தான் ரசிகன். பிளாக்கில் எவ்வளவுக்கு விற்றாலும் தமிழன் பார்த்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்கப்படுவோம்.

விஜய்யை பொறுத்தவரை தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காவலன் பெ‌ரிய வெற்றி என்றதெல்லாம் சும்மா. நான்கு கோடியைக்கூட இப்படம் சென்னையில் வசூல் செய்யவில்லை.

தெய்வத்திருமகள் எட்டு கோடி அளவுக்கு வசூலித்தது. அப்படியானால் காவலன் எந்த மாதி‌ரி வெற்றி என்று பார்த்துக் கொள்ளுங்கள். வேலாயுதத்தைப் பொறுத்தவரை விஜய் இரண்டு மாங்காய் அடித்தாக வேண்டும். முதலில் தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி. இரண்டாவது பாக்ஸ் ஆஃபிஸில் 7 ஆம் அறிவின் பக்கத்திலாவது இருந்தாக வேண்டும். கடினமான இலக்குகள்.

பாக்ஸ் ஆஃபிஸையே வி‌ரித்து பிளாட்ஃபார்ம் ஆக்கியது போன்ற சப்ஜெக்ட் என்பதால் 7 ஆம் அறிவின் வெற்றியில் சந்தேகமில்லை. ஆனால் வேலாயுதம் விஷயம் அப்படியல்ல. கெட்டவனை அழிக்கும் சூப்பர் ஹீரோ. சூப்பர் ஹீரோ கந்தசாமி நொந்த சாமியான ச‌ரித்திரம் நம்மிடையே உண்டு. கிராமத்தில் விதவை தாயார், ஒரே தங்கை சரண்யா மோகன், முறைப்பெண் ஹன்சிகா மோத்வானி என வாழ்ந்துவரும் விஜய், தங்கையின் திருமணத்தை முன்னிட்டு தான் பணம் போட்டிருக்கும் நிதி நிறுவனத்திலிருந்து பணம் எடுக்க பட்டணம் வருகிறார். வந்த இடத்தில் தொலைக்காட்சி நிருபர் ஜெனிலியாவின் அறிமுகம் கிடைக்கிறது. இதனிடையில் பட்டணத்து ரவுடிகளிடமிருந்து ஜெனிலியா காப்பாற்றப்படுகிறார். தன்னை காப்பாற்றியது ஒரு சூப்பர் ஹீரோ என்று ஜெனிலியா ஊடகம் வழியாக செய்தி பரப்புகிறார். இப்போது விஜய்யே அந்த சூப்பர் ஹீரோவாக கெட்டவர்களையெல்லாம் அ‌ழிக்கிறார். இதுதான் வேலாயுதத்தின் ஏகதேசமான கதை. சென்டிமெண்ட், காமெடி, ஆக்சன், காதல் என்று சகலத்தையும் பிழிந்து செய்யப்பட்டிருக்கும் ராஜா ஸ்பெஷல் பதார்த்தம்.

டிக்கெட் ‌ரிசர்வேஷன், திரையரங்குகளின் எண்ணிக்கை, வெளிநாடு மற்றும் கேரள உ‌ரிமை. தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமை என முதல் சுற்றில் வேலாயுதத்தை முந்தியிருக்கிறது 7 ஆம் அறிவு. இறுதி சுற்று எப்படி அமையும் என்பது தீபாவளி அன்று தெ‌ரிந்துவிடும். போதி தர்ம‌ரின் வர்மக் கலையை சூப்பர் ஹீரோ சமாளித்தால் இயக்குனர் ராஜாவுக்கு உண்மையிலேயே ஒரு ஓ போடலாம்.

Tuesday, October 25, 2011

தீபாவளி

                                தீபாவளி



 புத்தாடை, பட்டாசு, இனிப்புகளில்
வராத என் தீபாவளி,
"தீபாவளி வாழ்த்துகள்" எனும்
இருசொல் குறுஞ்செய்தியில்
ஓடி வருகிறது 
உன்னிடமிருந்து
வெடிச்சத்தங்களை விட்டு 
பூமலர்தலைக் கொண்டாட
கற்றுக்கொடுத்தவள் நீ!
தீபாவளி விடுமுறைக்கு
நீ வருவாயயென
ஆவலோடு காத்திருக்கிறோம்
நானும் தீபாவளியும்.
வெடிகளைக் கொளுத்தி 
கையால் வீசிக்கொண்டிருந்தவள்,
நான் நெருங்கியதும்
பட்டாசுக்கு பயந்தவளைப் போல
என் பின்னே ஒளிகிறாய்.
உன் பயத்தை
நான் ரசிப்பேனென நினைத்து...
அட... நான் ரசிப்பது உன் நடிப்பை!
நீ
திரி கிள்ளிய சந்தோஷத்தில்
செத்தேப் போகிறது 
பட்டாசு.
தீபாவளிக்கு முன்னிரவு
வீதியையும் மனதையும் நிறைத்தபடி
வாசலில் வரைந்துவைத்தாய்,
வண்ணப் பொடிகளால் ஓர் ஓவியம்.
தீபாவளிக்கு பின்காலை.
கலைந்து போன வண்ணங்களை
பாவமாய் நீ பெருக்குகையில், நீட்டுகிறேன்...
இரவோடிரவாக என் கேமராவுக்குள்
படமாகிப் போன ஓவியத்தை.
உன் முகத்தில் தீப ஒளி,
என் கண்ணில் கேமரா!
பட்டாசு சத்தங்களைக் காட்டிலும்
இனிப்புகளோடு என்னில் நுழையும்
உன் கொலுசொலி இசைத்துச் செல்கிறது
எனக்கான தீபாவளியை.





Sunday, October 23, 2011

20 Painkillers in Your Kitchen




                                                    www.sankarnetwork.blogspot.com
                                                      
20 Painkillers in Your Kitchen

Make muscle pain a memory with ginger

20 Pain
                                  Cures You Can Find in Your
                                  Kitchen
www.sankarnetwork.blogspot.com

Cure a toothache with cloves



www.sankarnetwork.blogspot.com

20 Pain
                                  Cures You Can Find in Your Kitchen
20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Erase earaches with garlic
www.sankarnetwork.blogspot.com

Painful ear infections drive millions of Americans to doctors’ offices every year. To cure one fast, just place two drops of warm garlic oil into your aching ear twice daily for five days. This simple treatment can clear up ear infections faster than prescription meds, say experts at the University of New Mexico School of Medicine. Scientists say garlic’s active ingredients (germanium, selenium, and sulfur compounds) are naturally toxic to dozens of different pain-causing bacteria. To whip up your own garlic oil gently simmer three cloves of crushed garlic in a half a cup of extra virgin olive oil for two minutes, strain, then refrigerate for up to two weeks, suggests Teresa Graedon, Ph.D., co-author of the book, Best Choices From The People’s Pharmacy. For an optimal experience, warm this mix slightly before using so the liquid will feel soothing in your ear canal.
20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Chase away joint and headache pain with cherries
www.sankarnetwork.blogspot.com

Latest studies show that at least one in four women is struggling with arthritis, gout or chronic headaches. If you’re one of them, a daily bowl of cherries could ease your ache, without the stomach upset so often triggered by today’s painkillers, say researchers at East Lansing ’s Michigan State University . Their research reveals that anthocyanins, the compounds that give cherries their brilliant red color, are anti-inflammatories 10 times stronger than ibuprofen and aspirin. “Anthocyanins help shut down the powerful enzymes that kick-start tissue inflammation, so they can prevent, as well as treat, many different kinds of pain,” explains Muraleedharan Nair, Ph.D., professor of food science at Michigan State University . His advice: Enjoy 20 cherries (fresh, frozen or dried) daily, then continue until your pain disappears.

20
                                Pain Cures You Can Find in Your Kitchen
www.sankarnetwork.blogspot.com

Fight tummy troubles with fish

Indigestion, irritable bowel syndrome, inflammatory bowel diseases...if your belly always seems to be in an uproar, try munching 18 ounces of fish weekly to ease your misery. Repeated studies show that the fatty acids in fish, called EPA and DHA, can significantly reduce intestinal inflammation, cramping and belly pain and, in some cases, provide as much relief as corticosteroids and other prescription meds. “EPA and DHA are powerful, natural, side effect-free anti-inflammatories, that can dramatically improve the function of the entire gastrointestinal tract,” explains biological chemist Barry Sears, Ph.D., president of the Inflammation Research Foundation in Marblehead , MA . For best results, look for oily fish like salmon, sardines, tuna, mackerel, trout and herring.

20 Pain Cures You Can
                                Find in Your Kitchen

Prevent PMS with yogur

 www.sankarnetwork.blogspot.com

20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Tame chronic pain with tur

 www.sankarnetwork.blogspot.com

Studies show turmeric, a popular East Indian spice, is actually three times more effective at easing pain than aspirin, ibuprofen or naproxen, plus it can help relieve chronic pain for 50 percent of people struggling with arthritis and even fibromyalgia, according to Cornell researchers. That’s because turmeric’s active ingredient, curcumin, naturally shuts down cyclooxygenase 2, an enzyme that churns out a stream of pain-producing hormones, explains nutrition researcher Julian Whitaker, M.D. and author of the book,Reversing Diabetes. The study-recommended dose: Sprinkle 1/4 teaspoon of this spice daily onto any rice, poultry, meat or vegetable dish.
20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

End endometrial pain with oats

www.sankarnetwork.blogspot.com

20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

www.sankarnetwork.blogspot.com

Soothe foot pain with salt

                        www.sankarnetwork.blogspot.com

n nails in warm salt water baths can cure these painful infections within four days, say scientists at California ’s Stanford University . The salt in the mix naturally nixes inflammation, plus it’s anti-bacterial, so it quickly destroys the germs that cause swelling and pain. Just mix 1 teaspoon of salt into each cup of water, heat to the warmest temperature that you can comfortably stand, and then soak the affected foot area for 20 minutes twice daily, until your infection subsides.

20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Prevent digestive upsets with pineapple

www.sankarnetwork.blogspot.com

20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Relax painful muscles with peppermint

www.sankarnetwork.blogspot.com

Suffering from tight, sore muscles? Stubborn knots can hang around for months if they aren’t properly treated, says naturopath Mark Stengler, N.D., author of the book, The Natural Physician’s Healing Therapies. His advice: Three times each week, soak in a warm tub scented with 10 drops of peppermint oil. The warm water will relax your muscles, while the peppermint oil will naturally soothe your nerves -- a combo that can ease muscle cramping 25 percent more effectively than over-the-counter painkillers, and cut the frequency of future flare-ups in half, says Stengler.
20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Give your back some TLC with grapes

www.sankarnetwork.blogspot.com

Got an achy back? Grapes could be the ticket to a speedy recovery. Recent studies at Ohio State University suggest eating a heaping cup of grapes daily can relax tight blood vessels, significantly improving blood flow to damaged back tissues (and often within three hours of enjoying the first bowl). That’s great news because your back’s vertebrae and shock-absorbing discs are completely dependent on nearby blood vessels to bring them healing nutrients and oxygen, so improving blood flow is essential for healing damaged back tissue, says Stengler.
20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Wash away pain injuries with water

www.sankarnetwork.blogspot.com

Whether it’s your feet, your knees or your shoulders that are throbbing, experts at New York ’s Manhattan College , say you could kick-start your recovery in one week just by drinking eight 8-ounce glasses of water daily. Why? Experts say water dilutes, and then helps flush out, histamine, a pain-triggering compound produced by injured tissues. “Plus water is a key building block of the cartilage that cushions the ends of your bones, your joints’ lubricating fluid, and the soft discs in your spine,” adds Susan M. Kleiner, Ph.D., author of the book, The Good Mood Diet. “And when these tissues are well-hydrated, they can move and glide over each other without causing pain.” One caveat: Be sure to measure your drinking glasses to find out how large they really are before you start sipping, she says. Today’s juice glasses often hold more than 12 ounces, which means five servings could be enough to meet your daily goal.
20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Heal sinus problems with horseradish

www.sankarnetwork.blogspot.com

20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Beat bladder infections with blueberries

www.sankarnetwork.blogspot.com

20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Heal mouth sores with honey

www.sankarnetwork.blogspot.com

20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Fight breast pain with flax

www.sankarnetwork.blogspot.com

20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Cure migraines with coffee

www.sankarnetwork.blogspot.com

20 Pain Cures You
                                Can
                                Find in Your Kitchen

Tame leg cramps with tomato juice

At least one in five people regularly struggle with leg cramps. The culprit? Potassium deficiencies, which occur when this mineral is flushed out by diuretics, caffeinated beverages or heavy perspiration during exercise. But sip 10 ounces of potassium-rich tomato juice daily and you'll not only speed your recovery, you'll reduce your risk of painful cramp flare-ups in as little as 10 days, say UCLA researchers.




Saturday, October 22, 2011

உளவியல் நிபுணர் எச்சரிக்கை சிறுவர்கள் இணைய தளத்திற்குஅடிமையா?


உளவியல் நிபுணர் எச்சரிக்கை சிறுவர்கள் இணைய தளத்திற்குஅடிமையா?

14 வயது முதல் 24 வயது வரை உள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை இணையதளத்திற்கு அடிமையாவதை பெற்றொர்கள் எச்சரிக்கையுடன் அணுகவேண்டும் என்று ஜெர்மனியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெர்மனி பெடரல் சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின் படி 14 முதல் 24 வயதுள்ளோர் வரை இணையதளத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

இதில் 2.4% முற்று முழுதான இணையதள அடிமைகள், 13.6% பிரச்சனை பயனாளர்கள் என்று வகைப்படுக்தியுள்ளனர்.

ஜெர்மனியின் மெய்ன்ஸ் பல்கலைக் கழகத்தின் சூதாட்ட அடிமைகள் புற நொயாளிகள் பிரிவில் பணியாற்றும் இயக்குனர் கிளாஸ் வுல்ஃபிளிங் என்பவர் இதனை தெரிவித்துள்ளார்.

'பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இணையதள அடிமைகளாகி தனிமைப்பட்டுப் போய் விட அனுமதிக்கக் கூடாது. பெற்றொர்கள் குழந்தைகளிடத்தில் இதுபோண்ற அறிகுறிகளைக் கண்டவுடன் அவர்களிடம் பேசி நயமாக வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்கிறார் இவர்.

குறிப்பாக ஆந்லைன் கணினி விளையாட்டுக்களுக்கு சிறுவர்கள் அடிமையாகி வருவது பெருத்துள்ளது என்று இவர் கூறுகிறார். கணினி விளையாட்டுக்களில் ஒரு பிரச்சனையை தீர்ப்பது என்கிற வகையில் ஆட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் இயல்பிலேயே அதன் பக்கம் சென்று விடுகின்றனர்.

இது தவிர சோசியல் நெட்வொர்க், அரட்டைகளுக்கு அடிமையாவதும் அதிகத்துள்ளது. அதாவது எதார்த்த வாழ்க்கையில் அல்லது நிஜமான உலக வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்காத தனி அடையாளம் இதில் கிடைப்பதாக இவர்கள் உணர்வதே அடிமைக்கு இட்டுச் செல்கிறது.

இணையதளத்தில் நண்பர்களை அடைகின்றனர். எப்போதும் அவர்கள் இணையத்தில் இருப்பதால் தனிமை இல்லை. ஆனால் உண்மையான சமூகத்திலிருந்து அன்னியப்பட்டு விடுகின்றனர் என்கிறார் இந்த ஜெர்மானிய உளவியல் நிபுணர்.

இதனை வலுக்கட்டாயமாக தடுக்க நினைத்தால் கடுமையான உளவியல் சிக்களுக்கு இவர்கள் ஆளாகின்றனர். தூக்கமின்மை உள்ளிட்ட பிற மன நோய்களும் ஏற்படுகிறது என்கிறார்.

அடிமையாகாமல் இணையதளத்தைப் பயன்படுத்துவோர் ஒருநாளைக்கு 3 மணிநேரம் இணையத்தில் இருக்கிறார்கள் என்றால் அடிமைகள் 8 மணி நேரத்திற்கும் கூடுதலாக அதில் புழங்குகின்றனர்.

இணையதளத்தை கட்டுப்பாட்டுடன் எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு தேவை என்று கூறியுள்ளார் இவர்.

இந்து மக்கள் கட்சி ர‌ஜி‌னிகா‌ந்‌த், கம‌ல்ஹாச‌‌னை கடுமையாக சாடியு‌ள்ளது.


இந்து மக்கள் கட்சி ர‌ஜி‌னிகா‌ந்‌த், கம‌ல்ஹாச‌‌னை கடுமையாக சாடியு‌ள்ளது.

''ஊருக்கு ஒரு உபதேசம், தனக்கு ஒரு உபதேசம் என்று நடிக‌ர்க‌ள் இருக்கக்கூடாது'' எ‌ன்று உ‌ள்ளா‌ட்‌சி தே‌ர்த‌‌லி‌ல் வா‌க்க‌ளி‌‌க்காத ர‌ஜி‌னிகா‌ந்‌த், கம‌ல்ஹாச‌‌ன் உ‌ள்‌ளி‌ட்ட நடிக‌ர், நடிகைகளை இந்து மக்கள் கட்சி கடுமையாக சாடியு‌ள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ''உள்ளாட்சி என்பது இதயம் போன்றது. மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து பிரச்சனைகளை தீர்க்க கூடியது. இத்தேர்தலில் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்வது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை'' எ‌ன்று இந்து மக்கள் கட்சி‌யி‌ன் மா‌நில அமை‌‌ப்பு செயலாள‌ர் க‌ண்ண‌ன் இ‌ன்று வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள அற‌ி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சாதாரண பிரஜைகளை விட பிரபலங்களாக இருப்பவர்கள் நிச்சயம் ஓட்டு போட்டு தங்களின் ஜனநாயக கடமைகளை ஆற்றுவது அவசியம் எ‌ன்று கூ‌றியு‌ள்ள க‌ண்ண‌ன், திரையுலகில் இருக்கும் ரஜினி, கமல், சூர்யா, கார்த்தி, ஆர்யா, திரிஷா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் தேர்தலில் ஓட்டு போடாதது வேதனை அ‌ளி‌‌ப்பதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

''திரைப்படங்களில் அரசியல்வாதிகள் தேர்தல் வாக்காளர்களின் கடமை போன்றவற்றை காட்சிப்படுத்துகின்றனர். ஓட்டு போடுவதன் அவசியத்தை வற்புறுத்துகின்றனர். மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளை போதிக்கின்றனர். நிஜ வாழ்க்கையிலும் நடிகர், நடிகைகள் அதுபோல் இருக்க வேண்டும். ஊருக்கு ஒரு உபதேசம், தனக்கு ஒரு உபதேசம் என்று இருக்கக்கூடாது என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்'' எ‌ன்று‌ம் க‌ண்ண‌ன் தனது அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

நடிகர், நடிகைகள் தவறாமல் ஓட்டு அளிப்பது ரசிகர்களையும் ஜனநாயக கடமையாற்ற தூண்டுவதாக அமையும் எ‌ன்று‌ம் அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் எ‌ன்று‌ம் க‌ண்ண‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வா‌க்க‌ளி‌க்காத நடிக‌ர், நடிக‌ைக‌ள் ‌மீது சா‌டு‌ம் இ‌ந்து ம‌க்க‌ள் அவ‌ர்க‌ளி‌ன் சூ‌ழ்‌நிலையை பு‌ரி‌ந்து கொ‌ண்டு அ‌றி‌க்கை ‌வி‌ட்டு இரு‌க்‌கிறதா எ‌ன்று தெ‌‌‌ரிய‌வி‌ல்லை. ஒவ்வொரு தேர்தலில் தவறாமல் வாக்களிக்கும் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கவில்லை.

'விஸ்வரூபம்' படத்துக்காக சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டதால் கமல்ஹாசன் வாக்களிக்கவில்லை எ‌ன்று கூற‌ப்ப‌டு‌கிறது. 'பில்லா 2' படப்பிடிப்புக்காக கோவா சென்றுள்ளதால் அஜித்குமா‌ர் வாக்களிக்கவில்லையாகு‌ம்.

'மாற்றான்' படத்துக்காக ர‌‌ஷ்யா சென்றுள்ளதால் சூர்யாவும், 'சகுனி' படத்துக்காக போலந்து சென்றுள்ளதால் கார்த்தியும் வாக்களிக்கவில்லை.

உடல் நலக் குறைவுக்காக சிகிச்சை மேற்கொண்டு தீவிர ஓய்வில் இருக்கும் ரஜினியின் உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஸ்டெல்லா மேரிஸ் பள்ளிக்கு வாக்களிக்க வருவார் என எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டது. ஆனால் நீண்ட நாள்களுக்குப் பிறகு பொது இடத்துக்கு வந்தால் செ‌ய்‌தியாள‌ர்களை சமாளிப்பது சிரமமாக இருக்கும் என்று கருதியதால் வாக்களிப்பதை தவிர்த்துவிட்டார் என ரஜினிகாந்த் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆர்வத்துடன் வாக்களித்த நடிகர், நடிகையர் பலர் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டவில்லை எ‌ன்பதே உ‌ண்மை.

Friday, October 7, 2011

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்.


ஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்து பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார். அவரு‌க்கு வயது 56.

‌நீ‌ண்ட நா‌ட்களாக பு‌ற்றுநோயா‌ல் அ‌வ‌தி‌ப்ப‌ட்டு வ‌ந்த அவ‌ர் நே‌ற்‌று இற‌ந்ததாக அ‌ந்த ‌நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸும் அவருடைய பள்ளி நண்பரான ஸ்டீபன் வோஸ்னிக்கும் இணைந்து ஆப்பிள் கணினியை கலிபோர்னியாவின் புறநகர் பகுதியில் 1976 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் 1ஆ‌ம் தே‌தி உருவாக்கினர்.

அதன்பின்னர் பெர்சனல் கம்ப்யூட்டர் உலகில் பெரும் புரட்சி ஏற்பட்டது. கணினி மட்டுமல்லாது ஆப்பிள் ஐபாட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதன உற்பத்தியில் நிறுவனம் கொடிகட்டிப் பறக்கக் காரணமாக அமைந்தவர்.


Tuesday, October 4, 2011

டிப்ஸ்:தீக்காயங்களுக்கு......!


டிப்ஸ்:தீக்காயங்களுக்கு......!


பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்டால் ஆபத்துதான். தீ விபத்துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத்துகளில் இருந்து உங்கள் உடமை, உயிர், உறவினர்கள் யாவரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்....
First Aid for Burns - Tips for Women
* நீங்கள் அறிந்து எங்காவது தீப்பற்றிக் கொண்டால் உடனே தீயணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியுங்கள்.
* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள்.
* விபத்தின்போது தீப்பிடித்து எரியும் நபரின் அருகில் நீங்கள் இருந்தால் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் - போர்வை, கோணி இதில் ஏதாவது ஒன்றினால் அவரை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் அணைந்து விடும்.
* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினால் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண்டும்.
* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொதிக்கும் சூடான எண்ணெய் தெறித்து விழுவதினாலோ, சூடான பொருள் உடலின் மீது விழுவதனாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்களை கையினால் தேய்ப்பதோ, நகத்தால் கிள்ளுவதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது 'ஆன்டிசெப்டிக்' மருந்துகளை வைத்து லேசாக கட்டுப்போட வேண்டும்.
* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காயத்தின் மீது தடவலாம். முட்டையின் வெள்ளைக் கருவை புண்ணின் மீது தடவினால் எரிச்சல் குறையும்.
* கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.
* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வைத்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூடலாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலாம்.
* தீக்காயம் பட்டவருக்கு அடிக்கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற்றைக் கொடுக்கலாம்.
* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

எளிய மருத்துவக் குறிப்புகள்


எளிய மருத்துவக் குறிப்புகள்

1) பொன்மேனி தரும் குப்பைமேனி:
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு:
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி:
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை:
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு:
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு:
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி:
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்:
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்:
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்:
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு:
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி:
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி:
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு:
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு:
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு:
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல:
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு:
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு:
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்:
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை:
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர:
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை:
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்:
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக:
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்:
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்:
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு:
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ:
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி:
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர:
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு:
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு:
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு:
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க:
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர:
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு:
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்:
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ:
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை:
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது:
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்:
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர:
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர:
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர:
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு:
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு:
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு:
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய:
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு:
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற:
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க:
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய:
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு:
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக:
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு:
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக:
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக:
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க:
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு:
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு:
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு:
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர:
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும்:
நசியம்குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க:
சூரணம்கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக:
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு:
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக:
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி:
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய:
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய:
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய:
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு:
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க:
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு:
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக:
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு:
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்ணோய் தீர:
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு:
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு:
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக:
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக:
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக:
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக:
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய:
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட:
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க:
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய:
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய:
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு:
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க:
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க:
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய:
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க:
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்:
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல:
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்