Saturday, July 23, 2011

sent to money for India


கடந்த 2010ம் ஆண்டில், தாய்நாட்டிற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய தொகை ரூ.2.53 லட்சம் கோடி


சென்னை:வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது கடந்த 7 ஆண்டுகளில் 100 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகில், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புவோரில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.உலகில், 190 நாடுகளில், 2கோடியே 70 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பல்வேறு பணிகளில் ஈடுபட்டு, திரட்டும் வருவாயில், குறிப்பிடத்தக்க தொகையை, இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தாருக்கு அனுப்புகின்றனர்.இந்தியாவில்கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில்வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக, கேரளாவில் இருந்து பணி வாய்ப்புதேடி அரபு நாடுகளுக்கு செல்கின்றவர்கள், அதிக அளவில் தாயகத்திற்கு பணம் அனுப்புகின்றனர்.அதுபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா,பிரான்ஸ் நாடுகளுக்கு செல்லும் பஞ்சாபியர்களும், அதிகத் தொகையை தாயகத்திற்கு அனுப்பி வருகின்றனர். இவ்வாறு உலகில் வசிக்கும் இந்தியர்கள், தாயகத்திற்கு அனுப்பும் தொகை கடந்த 8 ஆண்டுகளில் 162 சதவீதம் உயர்ந்துள்ளதாக, உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டுவெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவிற்கு 2,100கோடி டாலர் அனுப்பி இருந்தனர். இது, சென்ற 2010ம் ஆண்டு 5,500கோடி டாலராக (2 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.உலகில், இந்தியர்களைப்போல், எந்த ஒரு வெளிநாட்டவரும், தங்கள் தாயகத்திற்கு இந்த அளவிற்கு பணம் அனுப்பியதில்லை.எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் அயல்நாட்டவர், தாயகத்திற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தை பிடித்துள்ளதாக, உலக வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 8 ஆண்டுகளில் (2009ம் ஆண்டு நீங்கலாக), வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகத்திற்கு பணம் அனுப்புவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2004ம் ஆண்டு, வெளிநாடு வாழ்இந்தியர்கள், இந்தியாவிற்கு அனுப்பிய தொகை, 1,875கோடி டாலராக இருந்தது. இது, 2005ம் ஆண்டு 2,212கோடி டாலராகவும், 2006ம் ஆண்டு 2,833கோடி டாலர் என்ற அளவிலும்அதிகரித்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு, வெளிநாடு வாழ் இந்தி யர்கள், தாயகத்திற்கு 3,721கோடி டாலர் அனுப்பியுள்ளனர். இது, 2008ம் ஆண்டு 4,994கோடி டாலராகவும், 2009ம் ஆண்டு 4,925கோடி டாலர் என்ற அளவிலும்உயர்ந்துள்ளது. 2008 ஆண்டு, உலக பொருளாதார நெருக்கடியின் எதிரொலியால், 2009ம் ஆண்டு இந்தியர்கள் அனுப்பிய தொகை சற்றே குறைந்தது.வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணம், அவர்களின் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரவளர்ச்சிக்கும் மறைமுகமாக உதவுகிறது. இந்தியாவில் ரியல் எஸ்டேட், கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில், அயல் நாட்டு இந்தியர்களின் முதலீடு குவிந்து வருகிறது.அதனால், வெளிநாடுகளில் பணியாற்றி விட்டு, இந்தியா திரும்பு வோரின் உடமைகளை பாதுகாக்கவும், ஆதரவளிக்கவும்தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டியது அவசி யம்.'இத்தகையோருக்கு வழி காட்டுவதற்காகவே உருவாக்கப்பட்டது தான், 'ரிடர்ன் டுஇந்தியா டாட் காம்' இணைய தளம்' என்கிறார் எனர்கேட்நிறுவன தலைமை செயல்அதிகாரி ரகு ராஜகோபால்.இந்த இணையதளம், அமெரிக்காவில் இருந்து திரும்புவோரின் உடைமைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்துசேர்ப்பது முதல், பணிவாய்ப்பு, குடியிருப்பு உள்ளிட்ட அனைத்துவசதிகள் வரை செய்து தருகிறது.இதனால், இந்தியா திரும்புவோர், எவ்வித சிரமமுன்றி தாயகத் தில் வாழலாம் என்கிறார் ரகு ராஜகோபால்.வெளிநாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாய்நாடு திரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் 6 முதல் 8 லட்சம்பேர் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.உலகளவில், சீனர்கள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சீனா, ஹாங்காங்,தைவான் ஆகிய நாடுகளைச்சேர்ந்த 3கோடியே 50 லட்சம்பேர் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அதனால், வெளிநாடு வாழ் அன்னியர் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கையில் ஹாங்காங்,தைவான் நாடுகளைசேர்க்கக் கூடாது என்று புள்ளியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அவ்வாறுசேர்த்தால், இந்தியாவில் இருந்து பிரிந்த பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்த்து ஒன்றுபட்ட இந்தியாவாக கணக்கிடவேண்டும். இந்த கணக்கீட்டின் படி, அயல் நாடுகளில் வாழ்வோர் பட்டிய லில், இந்தியா முதலிடத்தை பெறும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரண்டாவது இடத்தில் சீனாகடந்த 2010ம் ஆண்டு, தாயகத்திற்கு அதிக தொகை அனுப்பியநாட்டவரில் சீனர்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.வெளிநாடு வாழ்சீனர்கள், தங்கள் நாட்டிற்கு 5,100கோடி டாலர், அனுப்பி யுள்ளனர்.அடுத்த இடங்களில், மெக்சிகோ (2,260கோடி டாலர்),பிலிப்பைன்ஸ் (2,130கோடி டாலர்), பிரான்ஸ் (1,590 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.

Sunday, July 3, 2011

7 வழிகள்! எடையைக் குறைக்க.


7 வழிகள்! எடையைக் குறைக்க.


உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1. உடற்பயிற்சி:
வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:
"அப்படித்தான் செய்கிறேன்" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!

3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:
"நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

4. தண்ணீர் தண்ணீர்:
ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

5. உட்கொள்ளும் அளவு:
மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

6. ரிலாக்ஸ் ப்ளீஸ்:
தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.

7. "நான் குண்டு" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:
நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.

இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!

சீன மூலிகை மருத்துவம்.


சீன மூலிகை மருத்துவம்.


நோய்களைத் தடுப்பது, நோய்க் கூறுகளைக் கண்டறிவது, நோய்களுக்கு சிகிச்சை தருவது ஆகியன சீன மூலிகை மருத்துவத்தின் நோக்கமாகுகம். இதில் இயற்கை மருந்துகளும் தயாரிக்கப்பட்ட மருந்துகளும் உள்ளன. அதாவது மூலிகைகள் மிருகங்கள், கணிமப் பொருட்கள்., சில ரசாயனப் பொருட்கள், உயிரி பொருட்கள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளாகும். சீன தயாரிக்கப்படும் மருந்துகளாகும். சீன மருந்தின் கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் வரலாறு உண்டு. எனினும் “சீன மருத்துவம்”என்ற சொல் சீனாவில் மேலை மருத்துவம் அறிமுகமான பின்னரே உருவாக்கப்பட்டது. மேலை மருத்துவத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக சீன மருத்தும் என்று பெயரிடப்பட்டது.


சீன மூலிகை மருத்துவத்தின் வரலாறு

ஷென் நோங் என்பவர் ஒரே நேரத்தில் பல மூலிகைகளை உட்கொண்டு கடைசியில் நச்சூட்டப்பட்ட ஒரு கதை சீன வரலாற்றில் காணப்படுகின்றதது. பழங்காலச் சீன மக்களுக்கு மருந்துகளை கண்டறிவதில் என்னெனஅன கிடையூறுகள் ஏற்பட்டன என்பதையும் அது விவரிக்கின்றது.

சீனாவில் ச்சியா, ஷாங் சூ வம்சங்கள் ஆட்ச்செய்த கி.மு.22 முதல் கி.பி.256 வரை எரிசாராய மருந்தும், சூப்(சாறு)மருந்தும் பயன்படுத்தப்பட்டது. சூ வம்ச காலத்தில் (கி.மு 11 முதல் கி.பி771)எழுதப்பட்ட பாடல் புத்தகத்தில் (ஷி ஜிங்)மருந்து பற்றி சில சகவல்கள் இடம் பெற்றுள்ளன. பண்டைய சீன மருத்துவம் பற்றி பதிவு செய்யப்பட்ட ஆவணம் இது தான். மற்றொரு புத்தகம் நெய் ஜிங் என்பது சீன மருத்துவக் கோட்பாடு பற்றிய ஆரம்பகால புத்தகமாகும். இதில் காய்ச்சலினால் உடல் வெப்பம் அதிகமாக உள்ள நோயாளியைக் குளரிவிக்க வேண்டும். குளிர்காய்ச்சல் கண்ட நோயாளியின் உடம்பைச் சூடாக்க வேண்டும் என்பது போன்ற கோட்பாடுகள் இதில் எழுதப்பட்டுள்ளன. மேலும் மருந்தில் ஐந்து சுவைகளைச் சேர்க்கும் போது வயிற்றுக்குள் கசப்பு ஏற்பட்டு வயிற்றுப் போக்கு ஏற்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இவையாவும் சீன மருத்துவக் கோட்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்தன.

சீன மூலிகை மருத்துவம் பற்றிய ஆரம்பகாலப் புத்தகம் எஷன் நோங் பெண் காவ் ஜிங் என்பது. இதில் பென் என்றால் வேர், வாவ் என்றால் குருத்து. இந்தப் புத்தகம் கி.மு.221 முதல் கி.பி.220 வரை இருந்த ச்சின் மற்றும் ஹான் வம்சங்களின் கால்தில் எழுதப்பட்டது. இதற்கு அடிப்படையான ஏராளமான தகவல்களை ச்சின் வம்ச காலத்திற்கு கின்ற மருத்துவ நிபுணர்கள் திரட்டினர். இந்தப் புத்தகத்தில் 365 வகை மருந்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்றைக்கும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் புத்தகம் தான் கீழை மருத்துவத்தின் தோற்றத்திற்கு ஒரு தொடக்கம் என்று கூறலாம்.

தாங் வமிச காலத்தில் (கி.மு618-கி.பி907)பொருளாதார வளம் கொழித்ததால் கீழை மருத்துவத்திற்கு ஊக்கம் கிடைத்தது. தாங் அரசு மருத்துவம் பற்றிய ஒரு செய்யுள் நூலை எழுத வைத்தது. அதன் பெயர் தாங் பென் காங். இது மருத்துவ சாத்திரத்தில் இப்போது கிடைக்கும் மிகவும் ஆரம்பகால நூலாகும். இந்தப் புத்தகத்தில் 850 வகை மருந்து மூலிகைகளும் அவற்றின் படங்களும் உள்ளன. இந்தப் புத்தகத்தால் கீழை மருத்துவத்தின் மதிப்பு உயர்நதது.

மிங் வம்சகாலத்தில் (கி.பி1368-கி.பி1644)மூலிகை மருந்தில் நிபுணரான லி ஷிசென் 27 ஆண்டுகள் அரும்பாடுபட்டு பென் சாவ் க்காங்மு என்ற புத்தகம் எழுதினார். 1892 வகை மூலிகை மருந்துகள் பர்றிய விவரங்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் சீன வரலாற்றிலேயே மகத்தான படைப்பாகக் கருதப்படுகின்றது.

1949ல் நவசீனா தோற்றுவிக்கப்பட்ட பிறகு தாவரவியல், நோய்கண்டறியும் அறிவியல், வேதியியல், மருந்துத் தயாரிப்பியல், மருந்தக மருந்துகள் போன்ற பல்வேறு துறைகளில் ஏராளமான ஆராய்ச்சிகளைச் செதுளல்ளனர். இந்த ஆராய்ச்சிகள் மூலிகை மருந்துகளின் மூலத்தையும் அவை சரியானவைதானா என்பதையும் அவை செயல்படும் முறையையும் கண்டறி. ஒரு அறிவியல் அடிப்படையை வழங்குகின்றன. பின்னர், மூலிகைமருந்தின் மூலம் பற்றி நாடு தழுவிய ஆய்வு நடத்தப்பட்டு 1961லி ஸோன் யாவ் ச்சி என்ற புத்தகம் எழுதப்பட்டது. 1977இல் மூலிகை மருந்து அவராதி வெளியிடப்பட்டது. அதன் மூலம் பதிவு பெற்ற மூலிகை மருந்துகளின் எண்ணிக்கை 5767 ஆர உயர்ந்தது. கூடவே குறிப்புப் புத்தகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், செய்தி ஏடுகள் மற்றும் பத்திரிகைகள் சீன மருத்துவம் பற்றி வெளியிடப்பட்டன. சீன மருந்துவம் பற்றி அறிவியல் ஆராய்ச்சிகளை நடத்தவும் கற்பிக்கவும் மருந்துகளைத் தயாரிக்கவும் நிறுவனங்களும் ஏற்படுத்தப்பட்டன.

சீன மூலிகை மருந்துகளின் இயற்கை வளங்கள்

சீனாவின் பிரதேசம் மிகப் பெரியது. பல்வேறு புவியியல் அம்சங்களும், வேறுபட்ட கால நிலைகளும் உள்ளன. இதன் காரணமாக வெவ்வேறு இயற்கைச் சூழல்கள் உண்டாகி பலவகையான மூலிகைச் செடிகளை வளர்்க்க முடிகிறது. தற்போது சீனாவில் 81000க்கும் அதிகமான மூலிகைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. அவற்றில் 600 மூலிகை மருந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலகிலேயே சீனாவில் தான் அதிக மூலிகை மருந்துகள் உள்ளன என்ற பெருமையும் கிடைத்துள்ளது. இந்த மருந்துகள் உள்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்வதோடு 80 நாடுகளுக்கும் வட்டாரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு பெரும் புகழ் பெற்றுள்ளன.

சீன மருந்துகளைப் பயன்படுத்துவது

சீன மருந்துகள் பயன்படுத்தப்படுவதற்கு நீண்ட நெடும் வரலாறு உண்டு. மக்களின் வாழ்க்கையில் சீன மூலிகை மருந்துகள் முக்கிய பங்காற்றியுள்ளன. இவை ஓரழவுக்கு சீனப் பண்பாடு போன்றவை. சீன மூலிகை மருந்துகளின் பெரும்பாலான மூலப் பொருட்கள் இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கின்றன. இதனால் பக்க விளைவுகள் அவ்வளவாக ஏற்படுவதில்லை. மருந்தின் உள்ளே பல்வகை மூலப்பொருட்கள் இருப்பதால் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த முடிகின்றது. சீன மூலிகை மருந்துகளின் மற்ற1ரு அம்சம் என்ன வென்றால் அவை பெரிதும் கூட்டுப் பொருட்களாக உள்ளன. வெவ்வேறு மூலப் பொருட்களை உரியான அளவில் எடுத்து தயாரிப்பதால் சிக்கலான நோய்கள் கூடக் குணமாகின்றன. அதேவேளையில் பக்கவிறைவுகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

சீன மருந்துகள் அதனுடைய கோட்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்தப்படுகின்றன. மனிதனுடைய உடம்பில் மருந்து என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதில் கவனம் செலுத்தி மருந்து பயன்படுத்தப்படுகின்றது. மருந்தினுடைய வீர்யம் மூலிகைச் செடியின் தன்னையினால் தீர்மானிக்கப்படுகின்றது. மருந்தை பாதுகாப்பாகவும் பயனுள்ள முறையிலும் பயன்படுத்துவதற்காக என்னென்ன கூட்டப் பொருட்கள் மருந்தில் உள்ளன. எதிர் அறிகுறிகள் மருந்து தரவேண்டிய அளவு எவ்வாறு மருந்தை உட்கொள்வது, மருந்தை எவ்வாறு பரிந்துரைப்பது என்பது போன்ற விஷயங்களை மருத்துவர்கள் தெலிந்திருக்க வேண்டியுள்ளது. சில சமயங்களில் நோயாளிகளின் வேறுபட்ட நிலைமையைப் பொறுத்து வெவ்வேறு கூட்டுப் பொருட்களை மருந்துத் தயாரிப்புக்காகத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. எதிர் அறிகுறிகளைப் பொருத்தமட்டில் மருந்திலுள்ள கூட்டுப் பொருட்களினால் ஏற்படக் கூடிய எதிர் அறிகுறி கருத்தலிப்பால் ஏற்படக் கூடிய எதிர் அறிகுறி, உணவு நச்சால் ஏற்படும் எதிர் அறிகுறி, நோயினால் உண்டாகும் எதிர் அறிகுறி போன்றவற்றை மருத்துவர்கள் கவனிக்க வேண்டியுள்ளது. மருந்தின் அளவை(டோஸ்)பொறுத்தமட்டில் ஒரு நாளில் நோயாளி எவ்வளவு மருந்து உட்கொள்ள வேண்டும். மருந்தைத் தயாரிக்கும் போது ஒவ்வொரு கூட்டுப் பொருகளும் சேர்க்கப்பட வேண்டிய சரியான அளவு என்ன என்பதையும் மருத்துவர்கள் அறிந்திருக்க வேண்டும்.


சீன மருத்துவத்தின் எதிர்காலப் போக்கு

எதிர்காலத்தில் சீனா மூலிகை மருந்துகளை தொடர்ந்து உற்பத்தி செய்வதோடு மேலும் பிறப்பான மூலிகைச் செடிகளின் வகைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். இதற்காக ஐஸோடோப்பு மற்றும் உயிரி பொறியியல் நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இதனிடையே அதிமதுர வேர், மண்டையோட்டு மலர் செடியின் வேர், காய்ச்சலைக் குணப்படுத்தக் கூடிய காய் ஹு எனப்படும் சீன மூலிகை போன்ற மிகவும் தேவைப்படக் கூடிய மீலிகைகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 வகை மூலிகைகளின் உறர்பத்தியை சீனா விரிவுப்படுத்தும். அதே வேளையில் விதைகள் மக்கிப் போகாமல் தடுக்கவும் மேலும் புதிய வகை மூலிகைகளைப் பயிலிடவும் சீனா மேலும் பல ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.