Sunday, August 28, 2011

2012 உலகை உலுக்க வரும் மிகப்பெரிய சூரியச் சூறாவளி


2012 உலகை உலுக்க வரும் மிகப்பெரிய சூரியச் சூறாவளி

100மில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தி கொண்ட மிகப்பெரிய சூரியப்புயல் ஒன்று 2012ஆம் ஆண்டு ஏற்படும் என்றும் இதனால் பூமியில் பலத்த சேதங்கள் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நாடுகளின் மின்சார வினியோக அமைப்புகளும் தகவல் தொடர்பு அமைப்புகளும் பலத்த சேதமடையும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

விமானப் போக்குவரத்து, மின்னணுச் சாதன அமைப்புகள், கப்பல் போக்குவரத்திற்கு உதவும் உபகரணங்கள் முக்கியமாக செயற்கைக் கோள்கள் வேலை செய்யாது.

நாசாவின் சூரியப்பௌதீகப் பிரிவு விஞ்ஞானி டாக்டர் ஃபிஷர் இது பற்றிக் கூறுகையில் 100 ஆண்டுகளில் அசாதாரண சக்தி கொண்ட இந்த சூரியப்புயல் முதன் முதலாகத் தாக்கவுள்ளது. இதனால் பெரிய அளவுக்கு மின்வினியோகத் தடைகளும், தகவல்தொடர்பு சிக்னல்கள் இழக்கப்படும். என்று எச்சரித்துள்ளார்.

சூரியப்புயல் தாக்குகையில் சூரியனின் வெப்ப அளவு 10,000 டிகிரி பாரன்ஹீட்டையும் கடந்து விடும்.

இந்த சூப்பர் சூரிய சூறாவளி இடி இடிப்பது போன்று நிகழும். பூமியின் காந்தப்புலங்களை நம்பி இயங்கும் நமது தகவல்தொழில் நுட்ப உலகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

இந்த வகை அதிசக்தி சூரியப்புயல் 2012 ஆம் ஆண்டிலோ அல்லது நிச்சயமாக 2013ஆம் ஆண்டிலோ ஏற்படும் என்பது உறுதி ஆனால் விளைவுகள் பற்றி இன்னமும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூரியப்புயலால் ஏற்படும் சூரிய எரிதழல்கள் பூமியின் காந்தப் புலத்தை பாதிக்கும். ஆனால் இது மிகமிகவேகமாக நடக்கும், ஒரு இடி இடிப்பது போன்ற நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்து விடும் என்கிறார் நாசா விஞ்ஞானி பிஷர்.

இதனால் ஏற்படும் மின்வினியோக அமைப்புகள் சேத உள்ளிட்ட பிற சேதங்களை சீர் செய்ய மிகப்பெரிய அளவில் பணம் செலவழியும் என்பதோடு நீண்ட காலம் பிடிக்கும் என்பதும் உண்மை.

சூரியசுழற்சியில் 24ஆம் கட்டத்தை அது எட்டுவதால் இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்தக் கண்டுபிடிப்புகள் ஆஸ்ட்ரேலியன் சயன்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

No comments: