Saturday, November 5, 2011

காமத்தை அடக்கும் வழிகள்



உலகில் மனிதனுக்கு எண்ணம் தோன்ற வேண்டுமென்றால் அதற்கு முதலில் மூளை காம எண்ணத்தை ஏற்படுத்தி கட்டளைப் பிறப்பிக்க வேண்டும். அதன் பின்னர் உடல் தன்னை தயார் செய்துகொண்டு உறவில் இறங்குகிறது. ஆனால், இந்தக் காம வேலையில் மட்டும்தான் மூளை தன் சொந்தக் கருத்துக்கலோடு, வேரொருவரையும் ஆலோசிக்கிறது.
அவர் வெளியாள் அல்ல. மரபணு எனப்படும் ஜீன்-கள் தான் அவை. பெண்களின் காம உணர்வைவிட விரைவாக காம உணர்ச்சி ஆண்களுக்கு ஏற்படுகிறது. அவனது காமப் பசியை அதிகமாக மறைத்து வைப்பதில்லை. உடலுறவின்போதும், உடலுறவின் முடிவில் வரும் உச்சக்கட்டத்தின் போதும் ஆண்கள் மிகுந்த ஆனந்தம் அடைவதுண்டு என உடலுறவு ஆராய்ச்சி நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள். (பெண்களைவிடக் குறைவுதான்).


ஆண் தனது காம உணர்வை வெளிப்படுத்த பல வழிகளையும் கையாள்வதுண்டு. உதாணரமாக ஒரு ஆண் சினிமாவில் ஹீரோவாக ஜொலிக்கும் போது எந்தப் பெண்ணும் அவனை விரும்புகிறாள். அவனாலும் தான் நினைத்தப் பெண்ணை அனுபவிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுகிறது.  உடலுறவு குறித்துக் கற்பனை செய்யாத மனிதர்கள் இல்லையென்றே கூறலாம்.

அதிகமான காம உணர்வு உள்ள ஒரு ஆண் பல பெண்களுடன் ஒரு பெண் பல ஆண்களுடனும் இனச் சேர்க்கை பல முறைகளில் செய்வதாகக் கற்பனை செய்வதும் உண்டு. காம உணர்வானது மனிதர்களின் கற்பனையில் பல முறைகளில் கையாளப்பட்டு வருகிறது.

ஸேடிசம் (Sadism) என்பது காமக் கேளிக்கையின் போது தனது துணையை வேதனைப்பட வைத்து அந்த வேதனையை சுகமாகக் கருதி தனது காம உணர்ச்சியைத் தணித்துக் கொள்ளும் ஒரு அரக்கத் தன்மை உடையதாகும்.

இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும் கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டுவர மடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலில் இருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர் அபிப்பிராயம் இருக்கிறது.

காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்வதை நாள்தோறும் வெளிவரும் செய்திகளின் ஊடாக அறிய முடிகிறது. காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கியிருக்கிறது. பெரும்பாலும், இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது.

இதிலிருந்து நாம என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால் சாதாரண மனித செயற்பாடுகளால் காமத்தை அடக்க முடியாது. காமத்தைவிட உயர்ந்த அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டுத்தான் இந்த உணர்வையே நம்மால் திருவுருமாற்றம் செய்ய முடியும்.

அன்பு என்ற ஒரு சக்தி உலகில் செயல்படாவிட்டால் உலகம் Inconscient நிலைக்குச் சென்றுவிடும். உணவுப் பழக்கம் என்பது பல்வெறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய விடயமாக இருக்கிறது. உதாரணமாக துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் (உண்மையானவர்கள்) ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது.

உடல் நலனை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும். எனவே, உணவுப் பழக்கத்தால் மட்டுமே காம இச்சையை குறைத்துவிட முடியும் என்று எண்ணக்கூடாது.

வெங்காயம், பூண்டு, அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து பாதி உப்பு, பாதி காரத்தில் மட்டு சாப்பிட்டால் காம இச்சை முற்றிலுமாக அடங்கிவிடாது. மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்த வழியாகும். ஆனால், இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்குத் தெரியாது. அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம். உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகள் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம்.

காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும். உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாக வேண்டும். பாலுணர்வுகளை மனதளவில் அடக்கி உடலளவில் அதன் தேவையையும் அடக்கலாம். மனிதனைப் பொறுத்தவரை அது இலகுவானது. அதற்கு ஆண்கள், பெண்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் பாலியல் தவறுகள், நோய்கள், பெருகுவதும், கருக்கலைப்புக்கள் தொடர்வதும் தவிர்க்கப்படும்.

No comments: